சமிந்த
அரசியல்இலங்கைசெய்திகள்

சமிந்தவின் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை வேண்டும்! – சஜித் வலியுறுத்து

Share

சமிந்த லக்சானின் மரணம் ஒரு கொலை எனவும், மேலும் அது ஒரு குற்றவியல் சார்ந்த குற்றம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தமது வீட்டுத் தேவைக்காக எண்ணெய் பெற்றுக்கொள்ள வந்த சமிந்தவை கொடூரமாகக் கொலை செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசின் அடக்குமுறை சார்ந்த நடவடிக்கைகளால் ரம்புக்கனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகிப் பலியாகிய இரு பிள்ளைகளின் தந்தையாரான கரந்தகஸ்தென்ன – நாரம்பந்த பிரதேசத்தில் வசித்து வந்த சமிந்த லக்சானின் வீட்டுக்கு இன்று சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தனது கணவரின் மரணத்தால் துயரடைந்துள்ள சமிந்த லக்சானின் அன்பு மனைவி மற்றும் அவருடைய இரு பிள்ளைகளுடன் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குடும்பத்தின் அத்தியாவசிய எதிர்காலச் செயற்பாடுகளுக்காக நிதி உதவி வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர், தேவைப்படும் எந்நேரத்திலும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர்களுக்காக முன்நிற்பதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...