rtjy 45 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா

Share

இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சம்பா அரிசி ஒருதொகை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

50,000 மெட்ரிக் தொன் சம்பா அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுவதாக அரச வர்த்தக பொது கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிதுந்தர தெரிவித்துள்ளார்.

சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கான கேள்விப்பத்திரம் கோரும் நடவடிக்கை நேற்றுமுன் தினம் நிறைவடைந்ததாகவும், இதனையடுத்து அரிசி இருப்பு இந்தியாவிலிருந்தே கொள்வனவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடரும் என நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்ற 1,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
17510297000
சினிமாசெய்திகள்

நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா..? விசாரணை தீவிரம்…

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா தற்போது ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered
உலகம்செய்திகள்

மிகப்பெரிய வெற்றி! ட்ரம்புக்கு சாதகமாகியுள்ள முக்கிய தீர்ப்பு

அமெரிக்கா முழுவதும் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுகளைத் தடுக்க நீதிபதிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் 6-3...

3 13
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி – கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல்வாதி

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு தலைமை நீதவான்...

5 13
இலங்கைஉலகம்செய்திகள்

அநுர குமாரவின் திட்டத்தை ஆதரிக்கும் வோல்கர் டர்க்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அநுர குமார திசாநாயக்கவும்,...