rtjy 45 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா

Share

இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சம்பா அரிசி ஒருதொகை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

50,000 மெட்ரிக் தொன் சம்பா அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுவதாக அரச வர்த்தக பொது கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிதுந்தர தெரிவித்துள்ளார்.

சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கான கேள்விப்பத்திரம் கோரும் நடவடிக்கை நேற்றுமுன் தினம் நிறைவடைந்ததாகவும், இதனையடுத்து அரிசி இருப்பு இந்தியாவிலிருந்தே கொள்வனவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடரும் என நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்ற 1,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...