யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று மாலை நுழைந்த வன்முறைக் கும்பலால் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews