தெஹிவளை – கவுடான பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் காலாவதியான மருந்துகளை விற்பனைக்காக காட்சிப்படுத்திய வர்த்தகர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
குறித்த வர்த்தகருக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட, ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2025 பெப்ரவரி 7ஆம் திகதியன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட குறித்த வர்த்தகருக்கு, கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தண்டனை தீர்ப்பை அறிவித்துள்ளது.