25 6845542ba9182
இலங்கைசெய்திகள்

கொழும்பு வெள்ளவத்தையில் சந்தேகத்துக்குரிய மரணம்

Share

கொழும்பு- வெள்ளவத்தையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர், சந்தேகத்துக்குரிய நிலையில் மரணமானமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேலவனாராம வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் மயக்க நிலையில் அவர் மீட்கப்பட்டு பின்னர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அங்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று ஜூன் 7 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.

உள்ளூர்வாசிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் பேரில் வெள்ளவத்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இறந்தவர் வெள்ளவத்தையில் உள்ள வேலவனாராம வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...