10 9
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Share

அரசாங்க ஊழியர்களின் நிர்ணயிக்கப்பட்ட அடுத்தகட்ட சம்பள அதிகரிப்பு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்படும் என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சம்பளத்தின் முதற்கட்டம் இந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர் சம்பளத்தை 60-80 சதவீதம் அதிகரித்து மூன்று கட்டங்களாக வழங்கும்.

இந்தாண்டு 30 சதவீத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையில் 30 – 35 சதவீதம் அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இருந்து செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனை நெருங்குகிறது. இந்த சம்பள உயர்வு அரச, கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அரசு செலவினங்களில் மிகப்பெரிய தொகை அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உட்பட தொடர்ச்சியான செலவுகளுக்கு செலவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...