25 4
இலங்கைசெய்திகள்

சஜித் பிரேமதாசவின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸார் தகவல்

Share

சஜித் பிரேமதாசவின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸார் தகவல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் கிடைத்தது. எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் அது தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்பதால், கூடுதல் படையணிகள் திரும்பப் பெறப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வழங்கப்பட்ட அதிகாரிகளை திரும்ப அழைக்கும் போது, ​​சபாநாயகர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரிகளின் எண்ணிக்கையே குறைக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் 317 அதிகாரிகளின் நீக்கம் தொடர்பில் தவறான செய்திகளே வெளியானது. அவரது பாதுகாப்பு நீக்கப்படவில்லை. பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த 50 பேர் உட்பட அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப செயற்படுவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
26 697b3f976a4cc
செய்திகள்உலகம்

விஷ்மாவின் உயிரைக் காப்பாற்ற மூன்று வாய்ப்புகள் இருந்தன: ஜப்பானிய நீதிமன்றத்தில் மருத்துவர் அதிரடி சாட்சியம்!

ஜப்பானின் நாகோயா குடிவரவு தடுப்பு நிலையத்தில் 2021-இல் உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் மரணம்...

1001225020
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் 40 வருட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது: பற்றைக்காடாக இருந்த ‘விதானையார் வீதி’ விவசாயிகளுக்காக மீளத் திறப்பு!

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு பகுதியில், கடந்த 40 வருடங்களாகக்...

accident 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பளையில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 63 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே பலி!

கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில்...

image 666aa8c037
செய்திகள்இலங்கைபிராந்தியம்

6-ஆம் தர மாணவர்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தம்: 2030 வரை தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படும் எனப் பிரதமர் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், இந்த ஆண்டு 6-ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் உள்வாங்குவதற்கான விசேட...