26 4
இலங்கைசெய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

Share

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 246 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சுயேட்சை குழுக்கள், செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 08க்கு இடையில் தங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன

இதன்படி மட்டக்களப்பு (22), யாழ்ப்பாணம் (22), திகாமடுல்ல (37), திருகோணமலை (17) மற்றும் கொழும்பு (17) ஆகிய மாவட்டங்களில் அதிகளவு குழுக்கள் வைப்புகளை செய்துள்ளன.

இதுவரை , மொத்தம் 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் ஆணையத்திடம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதியன்று வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் நிறைவுக்கு வருகின்றன.

அத்துடன் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...