12 2
இலங்கைசெய்திகள்

சஜித் அலுவலகம் மீது தாக்குதல் – ஜே.வி.பி அணி மக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

Share

சஜித் அலுவலகம் மீது தாக்குதல் – ஜே.வி.பி அணி மக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகம் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

மதவாச்சி தொகுதியின் கிரிகல்லேவ பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகம் மீது நேற்று முன்தினம் இரவு சிலர் அசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கட்சி உறுப்பினர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இந்த நாசகார செயலை மக்கள் விடுதலை முன்னணியின் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மீண்டும் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஜே.வி.பியின் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி மக்கள் தமது கொள்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அடக்குமுறைகளின் ஊடாக மக்களை பயறுமுத்தி தமது இயலாமையை காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, மதவாச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...