25 683eab4ed7b78
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திடம் சஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Share

உள்ளூர் சீனி உற்பத்திக்கு 18% வட் வரியும், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50% வட் வரியும் விதிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் செயல்படுவதாக அரசாங்கம் முன்னர் கூறியதாக தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் இன்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் உள்ளூர் சர்க்கரைக்கு விதிக்கப்பட்ட 18% வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில்,சுனில் ஹந்துன்நெத்தி, ஒரு பொருளுக்கு மட்டும் வட் வரியை நீக்க முடியாது என்று பதில் வழங்கியுள்ளார்.

இலங்கை வரிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் வட் வரியைக் குறைப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...