இலங்கையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்
யுனிசெப் அமைப்பின் கௌரவ தூதுவராக செயற்படும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் அவருடன் ஆளுநர் நவீன் திசாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

