11 28
இலங்கைசெய்திகள்

கட்சியின் நடவடிக்கை குறித்து அதிருப்தி வெளியிடும் எஸ்.எம்.மரிக்கார்

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது தம்மிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

அனைத்துப் பொறுப்புக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மானிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணசபை, மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கணிசமான வாக்கு பின்னணியைக் கொண்ட தமக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் மேயர் யார் என்பது பற்றியோ அடுத்த கட்ட நகர்வு பற்றியோ தமக்கு எதுவும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்கு வழங்கப்படாத பொறுப்புக்களை பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தாம் இந்தக் கட்சியை விட்டு வெளியேறிச் செல்ல போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...