12 8
இலங்கைசெய்திகள்

பிரிக்ஸில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்து ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு

Share

பிரிக்ஸில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்து ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு

பிரிக்ஸ் (BRICS )அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம், ரஷ்யாவின் தலைமையின் கீழ் ஏனைய நாடுகளுடன் இணைந்து பரிசீலிக்கப்படும் என்று ரஷ்ய (Russia) தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் என்ற வகையில் ரஷ்யா, இலங்கையின் விண்ணப்பத்தை வரவேற்பதாகவும், அது நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷ்யாவில் நடைபெற்ற அண்மைய உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கான கோரிக்கையை இலங்கை பதிவு செய்திருந்தது.

இதன்போது. இந்த விண்ணப்ப விடயத்தில், இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு உறுப்பு நாடுகளிடம், மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ( Vijitha Herath) சார்பாக கோரிக்கை விடுத்திருந்தார்.

ரஷ்;ய ஜனாதிபதியின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு ஸ்தாபக நாடுகளான பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா என்பவற்றுடன் இணைந்து 2024 அக்டோபர் 22 முதல் 24 வரை ரஷ்யாவின் கசானில் உச்சிமாநாட்டை நடத்தியது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...