16 4
இலங்கைசெய்திகள்

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

Share

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குறித்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பிரதான அமைப்பாளர் கே.டி. லால்காந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 2ம் திகதி மஹய்யாவ பிரதேசத்தில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரசாரக் கூட்டம் தொடர்பில் கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பொலிஸார் கிழித்துள்ளதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

வேட்பாளர்கள் குறித்த சுவரொட்டிகளை ஒட்ட முடியாது என்ற போதிலும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்வாறான ஓர் பின்னணியில் பிரசார சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

சில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பழைய அரசாங்கம் இன்னமும் ஆட்சியில் இருப்பதாக கருதி செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...