bus 2 scaled
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் பயணத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

Share

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

பஸ்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பிலேயே மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தனியார் பஸ்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருத்தல் கட்டாயமாகும்.பஸ் ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பஸ்ஸின் நடத்துநரே பொறுப்பாக வேண்டும்.

  • ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிகளை ஏற்றுத்தல் வேண்டும்.

  • அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிகின்றனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.

  • பஸ்களில் யாசகம் பெறுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

  • பஸ்ஸில் வெற்றிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழுப் பொறுப்பும் நடத்துநரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து பஸ்களும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக நடைமுறைப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...