3
இலங்கைசெய்திகள்

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

Share

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கான சஜித்தின் தீர்மானம் குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போருக்குப் பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அரசாங்கம் வட்டமேசை மாநாடு ஒன்றை நடத்த வேண்டும்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டம் தொடர்பான (Sajith Premadasa) உறுதிமொழியை அடுத்து, அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக தமிழ் குழுக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chndrika Bnadarathunga), மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஜே.வி.பியினரும் (JVP) 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கு ஆதரவளித்துள்ளனர்.

எனவே, இந்த திருத்தம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரது, நிலைப்பாட்டை கட்டியெழுப்ப உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் நாடாளுமன்றத்தையும் வலியுறுத்துகின்றேன்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...