இலங்கைசெய்திகள்

என்னை கொலை செய்ய சதி திட்டம்: ரொசான் ரணசிங்க

Share
24 6632e15b72101
Share

என்னை கொலை செய்ய சதி திட்டம்: ரொசான் ரணசிங்க

தம்மை கொலை செய்வதற்கு நஞ்சூட்டப்பட்டது என முன்னாள் அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக இவ்வாறு நஞ்சு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் ஜப்பானுக்கு சென்றிருந்த போது நஞ்சு வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து அண்மையில் அரசியல்வாதி ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தமக்கு யார் நஞ்சூட்டினார்கள் என்பது குறித்தோ யார் இந்த சதித் திட்டத்தின் சூத்திரதாரி என்பது பற்றியோ ரொசான் ரணசிங்க வெளிப்பைடையாக கருத்து வெளியிடவில்லை.

Share
Related Articles
14 5
இலங்கைசெய்திகள்

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற டேன் பிரியசாத் கொலையாளி

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்...

12 5
இலங்கைசெய்திகள்

வாக்களிக்க தகுதியுள்ள மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இலங்கையில் நாளை(6) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிக்க...

15 5
இலங்கைசெய்திகள்

இலங்கை வழிக்கு வராவிட்டால் வரிச் சலுகையை விலக்குங்கள்! தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்து

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும்...

13 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,...