24 663300bd4303b
இலங்கைசெய்திகள்

ரணிலின் மே தின உரை : வெளியான தகவல்

Share

ரணிலின் மே தின உரை : வெளியான தகவல்

நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மே தின நிகழ்வில் நேற்றைய தினம் (01.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

”ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய போது அதனை அங்குரார்ப்பணம் செய்வதற்காக சுபமுகூர்த்தம் ஒன்றை கட்சியின் ஸ்தாபகர் டீ.எஸ். சேனநாயக்க (D.S. Senanayake) தேடியிருந்தார்.

அதே போன்றதொரு சுப முகூர்த்த நேரத்திலேயே நாட்டிற்கான சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டிருந்தார்.

அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இந்த நாட்டுக்கும் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது. அதன் காரணமாகவே பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த நாட்டை எம்மால் கட்டி எழுப்ப முடிந்தது. மற்றவர்கள் எல்லாம் நாட்டைப் பொறுப்பேற்க மறுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் அந்த சவாலை எதிர்கொண்டேன்.

இதற்கமையவே, பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மேலும், இன்று நாடும் நெருக்கடியில் இருந்து மீ்ட்சி பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே உள்ள சுபமுகூர்த்தமே காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...