tamilnib 5 scaled
இலங்கைசெய்திகள்

ஊழலுக்கு எதிராக மக்கள் படை திரட்டுகின்றார் ரொஷான் எம்.பி

Share

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது எனச் சுட்டிக்காட்டி, அதிரடியான சில நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க முன்னெடுத்தார்.

அவரின் நடவடிக்கைகளால் ஆளுந்தரப்புக்கும், அவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சுப் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே புதியதொரு அரசியல் பயணத்தை அவர் ஆரம்பிக்கவுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...