tamilni 118 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு பொதுஜன முன்னணி எச்சரிக்கை

Share

அரசாங்கத்திற்கு பொதுஜன முன்னணி எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு பொதுஜன முன்னணி எச்சரிக்கைஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது எதிராக வாக்களிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் வகையிலான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு தேவையானவாறு தீர்மானங்கள் எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டால் இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும், நாங்கள் சொல்வது கேட்காவிட்டால் நாங்கள் ஏன் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் கட்சி என்ற வகையில் ஸ்திரமான தீர்மானத்தில் நிற்போம் என ரோகித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...