tamilni 446 scaled
இலங்கைசெய்திகள்

நத்தார் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளை

Share

நத்தார் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளை

உடப்பு பகுதியில் நத்தார் தேவ ஆராதணைகளில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற கோடீஸ்வரர் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நத்தார் தினமன்று அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறால் பண்ணை மற்றும் தென்னந்தோட்டங்களுக்கு உரிமையாளரான செல்வந்தர் ஒருவரின் வீட்டில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம் மற்றும் பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் ஜன்னல் ஒன்றை உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...