tamilni 445 scaled
இலங்கைசெய்திகள்

தவறான செயற்பாட்டால் இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

Share

தவறான செயற்பாட்டால் இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நுரைச்சோலை பிரதேசத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரே இவ்வாறு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு தனது நண்பர்கள் சிலருடன் மதுபான விருந்து ஒன்றில் கலந்து கொண்டதாகவும், வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த மக்கள் குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவருடன் வந்த ஒருவரை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நுரைச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பொலிஸ் அதிகாரியை மீட்டுள்ளனர்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மது அருந்தியிருந்ததை அறிந்த வைத்தியர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்த பொலிஸ் உத்தியோகத்தர், இரவு வேளையில் யாருக்கும் தெரிவிக்காமல் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

இன்று காலை நுரைச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது தனிப்பட்ட ஆடைகளுடன் சென்றுள்ளார்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் விருந்திற்குச் செல்லும் வேளையில் தான் ஓய்வெடுக்கப் போவதாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும் ஆனால் அது தொடர்பில் எந்த குறிப்பும் இல்லையெனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...