வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் புரட்டப்பட்டுத் தகடுகள் களவாடப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் ஆலயம் பூட்டப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் ஆலயத்துக்குள் புகுந்து மூல விக்கிரகத்தைப் புரட்டி அதன் கீழிருந்த தகடுகளைத் திருடிச் சென்றுள்ளதுடன் திருப்பணி உண்டியலையும் உடைத்துக் களவாடியுள்ளனர்.
இந்த ஆலயத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மஹா கும்பாபிசேஷம் இடம்பெற்ற நிலையில் குறித்த சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment