IMG 5944 12 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

“கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்” – வவுனியாவில் வீதி மறியல் போராட்டம்

Share

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்து இளையோர் மற்றும் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக கோட்டபாய ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியவாறும், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டம் இடம்பெற்றது. அத்துடன் போராட்டக்காரர்கள் ஏ – 9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் ஏ – 9 வீதியை மறித்துப் போராடிய அவர்கள் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தாது பின்னர் பிரதான வீதியில் இருந்து விலகிச் சென்று வீதியோரத்தில் நின்று “கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்” எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அப்பகுதியில் நின்ற இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர் ஒருவர் மதுபோதையில் போராட்டக்காரர் மீது அருகில் இருந்த வெற்றிலைக் கடையில் இருந்து பெட்டி ஒன்றைத் தூக்கி வீசினார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளையோர் அவருடன் முரண்பட்டபோது குறித்த ஊழியர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் குறித்த நபர் மீள அங்கு வந்தபோது அவரை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அவரைக் கடுமையாக எச்சரித்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் இந்தப் போராட்டம் இடம்பெற்றதுடன், அரசுக்கு எதிராகப் பல கோஷங்களும் எழுப்பப்பட்டன.

#SriLankanews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...