rtjyc scaled
இலங்கைசெய்திகள்

யாழில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Share

யாழில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்ட நிலையில், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி உப்புமடம் பகுதியில் இன்று (04.10.2023) இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுன்னாகத்தைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான லோகராசா தர்சன் என்ற குடும்பத்தலைவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்துக்கு காரணமான காரினை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் கூடியவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டனர்.

உரிய விசாரணைகள் இடம்பெறாது சடலத்தை அப்புறப்படுத்தியதுடன் விபத்துக்கு காரணமான காரினை பொலிஸார் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

அதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. அத்துடன், காரின் சாரதி பொலிஸில் சரண்டைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
1733038624 vehicle import
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதிகள் 2026 இல் இயல்பு நிலைக்குத் திரும்பும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின்...

25 6787f6ba5e006
செய்திகள்உலகம்

AI சகாப்தத்தில் தொடரும் பணிநீக்கங்கள்: மெட்டா நிறுவனத்தில் 600 ஊழியர்களுக்குப் பணி நீக்கம்!

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில்,...

gold01
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்: ஒரே வாரத்தில் ரூ. 77,000 குறைவு!

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது....

10745 24 10 2025 10 3 0 5 IMG 20251024 WA0029
செய்திகள்இலங்கை

ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து: 25 பயணிகள் உடல் கருகி பலி!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 24) அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆம்னி...