1 1
இலங்கைசெய்திகள்

நெருக்கடியாக மாறும் அரச வருமானம்: திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடப்படும் அபாயம்

Share

நெருக்கடியாக மாறும் அரச வருமானம்: திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடப்படும் அபாயம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இருந்து எதிர்பார்த்த வரி வருமானம் கிடைக்காமையால் அரச வருமானம் நெருக்கடியாக மாறும் அபாயம் காணப்படுவதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்க மற்றும் மதுவரி திணைக்களம் ஈட்ட வேண்டிய மொத்த வருமான இலக்கு 4,127 பில்லியன் ரூபாவாகும். அந்தத் தொகையிலிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஈட்ட வேண்டிய வருவாய் இலக்கு 2,024 பில்லியன் ரூபாவாகும்.

இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான 9 மாதங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஈட்ட வேண்டிய இலக்கு வருமானம் 1,518 பில்லியன் ரூபாவாகும்.

எனினும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அரசாங்கத்தின் நிதித் திணைக்களங்களுக்கு வழங்கிய ஆவணங்களில், முதல் ஒன்பது மாதங்களுக்கு 1,498 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்த ஒன்பது மாதங்களில் திணைக்களம் 1,423 பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. 75 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...