25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

Share

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏதிலியாக வாழ்ந்த நிலையில், நாடு திரும்பிய ஒருவர் பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த அறிவிப்பை, பிமல் ரத்நாயக்க விடுத்துள்ளார்.

இந்த கைது சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தாயகம் திரும்பி வர பதிவு செய்துள்ள 10,000இற்கும் மேற்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதந்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசாங்கக் கொள்கை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாட்டில் உள்ள பழைய சட்டம் தானாகவே செயற்பட்டமையினால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும், போருக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த சட்டத்தை மாற்றியிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, தாம் 2007இல் இந்தியாவில் உள்ள ஏதிலி முகாம்களுக்குச் சென்றதாகவும், 2008இல் அந்த முகாம்களில் 28,500 இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஒரு சட்டத்தை முன்னோடியாக அறிவித்ததாகவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த குடிவரவுக் கொள்கையை திருத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...