25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

Share

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏதிலியாக வாழ்ந்த நிலையில், நாடு திரும்பிய ஒருவர் பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த அறிவிப்பை, பிமல் ரத்நாயக்க விடுத்துள்ளார்.

இந்த கைது சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தாயகம் திரும்பி வர பதிவு செய்துள்ள 10,000இற்கும் மேற்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதந்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசாங்கக் கொள்கை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாட்டில் உள்ள பழைய சட்டம் தானாகவே செயற்பட்டமையினால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும், போருக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த சட்டத்தை மாற்றியிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, தாம் 2007இல் இந்தியாவில் உள்ள ஏதிலி முகாம்களுக்குச் சென்றதாகவும், 2008இல் அந்த முகாம்களில் 28,500 இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஒரு சட்டத்தை முன்னோடியாக அறிவித்ததாகவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த குடிவரவுக் கொள்கையை திருத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...