24 6625261118bd5
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பயங்கரவாதம் குறித்து இந்தியா கண்டனம்

Share

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பயங்கரவாதம் குறித்து இந்தியா கண்டனம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில்(Easter attack sri lanka), உயிரிழந்த அனைத்து உயிர்களையும் இலங்கை நினைவுகூரும் நிலையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் கண்டிப்பதாக இந்தியா(India) கூறியுள்ளது.

குறித்த விடயத்தினை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India) தனது உத்தியோகபூர்வ எக்ஸ்(X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடனும் இலங்கை மக்களுடனும் இந்தியா ஒத்துழைப்புடன் நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா(Santhosh Jha), 2019 ஆம் ஆண்டில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற தளங்களில் ஒன்றான புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று (21.04. 2024) நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கை மக்களுக்கு, ஒத்துழைப்பை வெளிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு குறுகிய பயணமாக கொழும்புக்கு பயணித்தார்.

தனது பயணத்தின் போது, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, நாட்டின் தலைநகரில் உள்ள நாட்டின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...