24 6646a41d6dcc9
இலங்கைசெய்திகள்

இந்தியா – இலங்கை படகு சேவை மீண்டும் ஒத்திவைப்பு

Share

இந்தியா – இலங்கை படகு சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை மீண்டும் காலவரையின்றி தாமதமாகியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையே மே 13 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படிவிருந்த பயணிகள் படகுச் சேவை “தொழில்நுட்பக் குறைபாடு” காரணமாக தாமதமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் “தொழில்நுட்பக் குறைபாட்டின்” தன்மை அமைச்சரால் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, சீறற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்குப் முன்னர் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர், இந்தியா – இலங்கை கடல்சார் ஒத்துழைப்பின் முக்கிய அங்கமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது மூன்று முறை தாமதமானது.

காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக இந்தியா 63.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 104 கிலோமீட்டர் (56 கடல் மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...