4 3
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் சாணக்கியன், சிறிநேசன் உட்பட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு

Share

மட்டக்களப்பில் (Batticaloa) சுதந்திர நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு எதிராக ஏழு நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு காந்தி பூங்கா பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயாதிக எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக் கூடாதென குறித்த நபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இலங்கை குடியரசின் தேசிய தினம் கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 08 வது சரத்தில் கூறப்பட்டுள்ளமையும் தடையுத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் பின்வருமாறு,

சபாரத்தினம் சிவயோகநாதன் அல்லது சீலன் (இணையம் அரச சார்பற்ற குழுவின் தலைவர்)
ஞானமுத்து சிறிநேசன் (நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு)
இராசமாணிக்கம் சாணக்கியன் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் )
அமலன் அமலநாயகி (காணாமல் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி)
இளையதம்பி சிறிநாத்
சகாயராசா சுகந்தினி
இருதயம் செல்வக்குமார் அல்லது செல்வா
மேற்குறிப்பிடப்பட்ட நபர்களுடன் சேர்ந்து செயற்படும் வேறு எவரேனும் நபர்கள்.

 

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...