இலங்கை வந்த சுற்றுலா பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்

tamilnaadi 134

இலங்கை வந்த சுற்றுலா பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ குறித்து சர்சசை நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பெற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் ஒருவர் சுற்றுலா வழிக்காட்டியுடன் சென்றுள்ளார்.

5000 ரூபாவுக்கு உணவு உட்கொண்ட பெண்ணுக்கு பொய்யான விலை பட்டியல் கொடுத்து 35000 ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு உணவக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உணவகத்தில் மிரட்டி பணம் பறிப்பதை சுற்றுலா வழிக்காட்டி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மிகவும் மோசமான முறையில் ஹோட்டல் ஊழியர்கள் செயற்பட்டுள்ளனர்.

Exit mobile version