5 18
இலங்கைசெய்திகள்

நீண்டதூரப் போக்குவரத்து சாரதிகள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானம்

Share

நீண்ட தூரப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக மோட்டார் ​போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் றம்பொடை, கெரண்டி எல்ல அருகே நடைபெற்ற பேருந்து விபத்தின் பின்னர் இந்த விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விபத்துக்குள்ளான கதிர்காமம்-குருநாகல் வழித்தடமானது நீண்ட நேரம் கொண்ட ஒரு போக்குவரத்து வழித்தடமாகும்.

அவ்வாறான வழித்தடங்களில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் சாரதிகளுக்கு போதுமான ஓய்வு கிடைக்கின்றதா? ஒழுங்கான தூக்கம் கிடைக்கின்றதா? பயணத்தின் இடையில் அவர்களுக்கு சிறிதளவேனும் ஓய்வொன்றை எடுப்பதற்கான வசதிகள் உள்ளதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இரவுநேரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...