tamilni 140 scaled
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்க பணத்தை நிறுத்த தீர்மானம்

Share

உள்ளூராட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்க பணத்தை நிறுத்த தீர்மானம்

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை நிறுத்துவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரிகள் உரிய முறையில் அரச சேவையை வழங்குவதில்லை என தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர்கள் தமது பயணச் செலவு, மேலதிக நேர கொடுப்பனவு போன்றவற்றை சபையின் பணத்தில் இருந்து பெற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி நிறுவனங்களின் வினைத்திறன் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதாகவும், அதற்கேற்ப சிறந்த மாநகர சபை, மாநகர சபை மற்றும் பிராந்திய சபைகளை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் தரம் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப, முறையாக மக்கள் சேவை செய்யாத உள்ளாட்சி அமைப்புகளை ஆய்வு செய்து, அவற்றின் செயல்திறனை அதிகரிக்க தேவையான வசதிகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படும்

குறைந்த வசதிகளைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களை மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டல்களையும் வசதிகளையும் அமைச்சு வழங்கும்.

கொழும்பு மாநகர சபை போன்ற வசதிகள் அதிகம் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்கத்தின் வசதிகள் தேவையில்லை.

தற்போது, உள்ளாட்சி அமைப்புகள் வரி வருவாயைப் பெறுகின்றன. ஆனால் அவற்றின் ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு உள்ளுராட்சி சபையையும் சுயாதீனமாக இயங்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்ததன் பின்னர் அந்த சபைகள் தமக்கான வருமானத்தை பெற்று சுயாதீனமாக இயங்க வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...