tamilni 139 scaled
இலங்கைசெய்திகள்

ரஜமஹா விகாரையின் விகாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்!\

Share

ரஜமஹா விகாரையின் விகாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்!\

மிஹிந்தலை-ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.12.2023) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இராணுவத்தில் இருப்பதாக கூறிக்கொண்ட இருவர் கடந்த 3 வாரங்களாக அந்த புனித ஸ்தலத்தில் இருந்த போது, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விகாராதிபதி தேரர் கருதுகின்றார்.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.

கட்சி பேதமின்றி விகாராதிபதியின் வாழ்க்கை தொடர்பான பொறுப்பு இருக்கின்றது, நாட்டில் நடக்கும் தவறுகளை கட்சி வேறுபாடின்றி அவர் விமர்சித்து வந்தாலும் அவற்றைத் தாங்கிக்கொள்வது நமது கடமை என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை மிஹிந்தலை புனித தலத்தின் பாதுகாப்பு மற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவருக்கும் இந்த அடையாளம் காணப்பட்ட நபர்கள் குறித்து தெரியாது.

நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் கட்டளை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த இருவரும் வந்துள்ளதாக பின்னர் தெரிய வந்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...