நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலவிவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம் முற்பதிவு செய்யப்பட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
யாழ்ப்பாணம் – நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலைய வாயிலில் இளைஞர்கள் சிலர் தமது மோட்டார் வண்டிகளை நிறுத்து, இந்த இடம் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் பதாகை தொங்கவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.
#SriLankaNews