24 6617a6673a3c2
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு!

Share

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு!

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 8 பேரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 6 ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இது குறித்து மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார (Janaka Bandara) தெரிவிக்கையில்,

கடத்தப்பட்டடு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களில் 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 8 பேரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கையர்களைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அனுப்ப இலங்கைத் தூதரகம், வெளியுறவுத் துறை அமைச்சு மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியுள்ள ஏனைய இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அனுப்ப மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இலங்கையர்கள் அடங்கிய குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்புக்காக தாய்லாந்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மியன்மாரின் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்டு சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாதக் குழு, கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிக்க 8,000 அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரியிருந்த நிலையில் இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் கடந்த ஆண்டு அவர்களில் சுமார் 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 56 இலங்கையர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தற்போது சுமார் 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 3
செய்திகள்இந்தியா

டெல்லி வெடிப்புச் சம்பவம்: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முக்கிய சந்தேக நபர்கள் திட்டம் – அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

டெல்லியில் அண்மையில் நடந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய சந்தேக நபர்கள், எதிர்வரும் இந்தியக்...

Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...