24 66306e7ed48b9
இலங்கைசெய்திகள்

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

Share

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

ஓய்வுபெறும் வயதை எட்டிய போதிலும் கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் (Cardinal Malcolm Ranjit) பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தேசிய தொடர்பாடல் பணிப்பாளர் ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், கர்தினால் சேவை நீடிப்பு கோரியதாக கூறி அரசாங்க அமைச்சர் ஒருவரினால் நாடாளுமன்றத்தில் தவறான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், கர்தினால் சேவை நீடிப்பை கோரவில்லை என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டதாக கர்தினால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே வத்திக்கானுக்கு அறிவித்துவிட்டார்.

எனினும், கர்தினால் இன்னும் பணிபுரிய முடியும் என்பதால் அவரை பணியை தொடருமாறு பாப்பரசர் வேண்டுகோள் விடுத்ததாக தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபையும் கர்தினாலை கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...