5 14
இலங்கைசெய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

Share

இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப் பிள்ளை மரியதாஸ் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து ஜனாதிபதி அநுர இந்திய பிரதமருடன் கலந்துரையாடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையில், நேற்று(10) யாழ். மாவட்ட கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சம்மேளனத் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் அத்துமீறிய இழுவை படகுகளினால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

நாம் பலமுறை இந்திய தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தும் இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் தொடர்ச்சியாக நமது கடற்பரப்புக்குள் நுழைந்து எமது வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முதல் பயணமாக எதிர்வரும் வாரம் இந்தியா செல்ல உள்ளதாக அறிகிறோம்.

இந்திய இழுவைமடி படகுகளினால் எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருவதை இலங்கை ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் நன்கு அறிவார்கள்.

மேலும், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக வலைகள் எடுத்து வரப்பட்ட நிலையில் கடற்றொழிலாளர்கள் வழங்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கு தெரிவித்த நிலையிலும் இதுவரை கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் உரிய கவனம் எடுத்து தேங்கி கிடக்கும் வலைகளை கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, எமது கடற்றொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினையான இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய பிரச்சினை இந்திய பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசி எமது ஜனாதிபதி அநுர தீர்த்து வைப்பார் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...