tamilni 45 scaled
இலங்கைசெய்திகள்

அதிகாரிகளை எச்சரித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர்

Share

அதிகாரிகளை எச்சரித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர்

அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தும் மாவட்ட செயலாளர்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சமன் ஏக்கநாயக்க இவ்வாறு எச்சரித்துள்ளார்.

நிவாரண வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தும் அனைத்து முக்கிய பொறுப்புள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை சில குழுக்கள் தாமதப்படுத்துவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.

நிவாரண திட்டத்தை பெறாதவர்களுக்கான மேல்முறையீடுகள் மற்றும் புதிய பதிவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், கொடுக்கப்பட்ட இலக்கில் ஒரு சில மாவட்ட செயலாளர்கள் 100% பூர்த்தி செய்துள்ளதாகவும் மற்றொருவர் 20% இலக்குடன் பூர்த்தி செய்துள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனி இடம்பெற கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...