நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், அடுத்த வாரம் முதல் நிவாரணப்பொதிகள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.
பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பேருந்து சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக 17 ஆயிரம் பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் பெற்றுக்கொள்ள வவுச்சர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பஸ்களை சேவைக்கு ஈடுபடுத்த முன்னர் டயர் மற்றும் காப்புறுதி உள்ளிட்ட தேவைகளுக்காக நிவாரணம் வழங்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.