rtjy 31 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

புறக்கணிக்கப்பட்டார் மகிந்த: மொட்டு கட்சி தொடர்பில் விளக்கம்

Share

புறக்கணிக்கப்பட்டார் மகிந்த: மொட்டு கட்சி தொடர்பில் விளக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு நிறைவு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

”கட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுவரொட்டியை மறைத்து வேறொரு தரப்பினர் சுவரொட்டியை காட்சிப்படுத்தியுள்ளனர்.

எங்கள் கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாடு வெளிதரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக மொட்டு கட்சி தற்போது பத்து கட்சிகளாக பிளவுபட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அவர்களின் பிளவு நிலையை காணமுடிகிறது.

தற்போது ஆளும் தரப்பில் சுகாதாரத்துறை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ஒருவர் மாற்றப்படுவதால் மட்டும் தீர்வு கிடைக்காது.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...

10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...