25 6938269b096e7 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் – தேசிய மக்கள் சக்தியிடம் வலிகாமம் தென்மேற்கு தவிசாளர் கோரிக்கை!

Share

அப்பாவி மக்களைத் தூண்டி, அவர்களின் சிந்தனையை மாற்றி, அனர்த்தத்தில் அரசியல் செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுப்பதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 9) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் 5ஆம் திகதி, கல்லுண்டாய் குடியிருப்புப் பகுதி மக்கள், குறித்த பகுதிக்குத் தண்ணீர் கொடுக்கச் சென்ற வாகனத்தை இடைமறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரதேச சபை நீண்ட காலமாக முழுமையாகத் தண்ணீர் வழங்குவதில்லை என அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்தக் குடியிருப்பு, 2019ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் குடியிருப்புக்கான தண்ணீர் சேவையை பிரதேச செயலகமே வழங்கி வந்தது.

பிரதேச செயலகம் அதனைத் தொடர்ச்சியாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதனால் எம்மிடம் (பிரதேச சபையிடம்) கேட்டதற்கமைய ஐந்து வருடங்களாக இந்தச் சேவையைத் தாமே செய்வதாகத் தவிசாளர் குறிப்பிட்டார்.

பிரதேச சபை தனது கடமையைச் சரியாகச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட தவிசாளர், நீர்த் தட்டுப்பாடு குறித்த போராட்டத்துக்குப் பதிலளித்துப் பின்வருமாறு விளக்கினார்:

“தண்ணீர் இல்லாமல் அந்தக் குடியிருப்பில் யாரும் மரணித்ததாகவோ ஏதும் நடந்ததாகவோ இதுவரை எந்தத் தகவலும் பதிவில் இல்லை.”

பிரதேச சபையின் வளங்களைப் பொறுத்தவரையில் சில தடங்கலும் இடையூறுகளும் ஏற்படும் நேரங்களில் தண்ணீர் போகின்ற நேரங்கள் தவறினாலும், அந்தத் தண்ணீர் ஏதோவொரு விதத்தில் சென்றடையும்.

கல்லுண்டாயில் மழை அதிகம் பெய்யும் நேரத்தில் பெரிய பவுசர்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அது புதைந்துவிடும். பிறகு அதனை வெளியில் கொண்டுவர முடியாது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...