6 1 scaled
இலங்கைசெய்திகள்

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி: இலங்கையில் கொட்டும் டொலர்

Share

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி: இலங்கையில் கொட்டும் டொலர்

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதனால் இலங்கைக்கு நம்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹௌத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை போக்குவரத்து இடமாக பயன்படுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வழமைக்கு மாறாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சூயஸ் கால்வாய் வழியாக வந்த கப்பல்கள் தற்போது தென்னாப்பிரிக்கா கண்டம் வழியாக வருகின்றன.

கொழும்பு துறைமுகத்தின் மூலோபாய இருப்பிடம் காரணமாக, துறைமுகத்தை கடக்கும் கப்பல்கள் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு எளிதில் அணுகக்கூடியவையாகும்.

தென்னாப்பிரிக்கா வழியாக செல்லும் கப்பல்களுக்கான முதல் துறைமுகம் கொழும்பு துறைமுகமாகும். அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் இந்தியா செல்லும் பெரும்பாலான கப்பல்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைகின்றன.

மீள் ஏற்றுமதி இதுவரை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் நடவடிக்கை லால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டுக்கு அதிக டொலர்கள் கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...