36
இலங்கைசெய்திகள்

வடக்கில் கொட்டிக்கிடக்கும் அரச வேலைவாய்ப்புகள்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Share

வடக்கில் கொட்டிக்கிடக்கும் அரச வேலைவாய்ப்புகள்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை இன்றையதினம் (31) ஜனாதிபதி மேற்கொண்டிருந்த போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக காவல்துறை திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் தமிழ் மொழி மூல காவல்துறை உத்தியோகஸ்த்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், காவல்துறை வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி அநுர, தமிழ் இளைஞர் யுவதிகள் சேவையில் இணைய வந்தால், 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை காவல்துறை வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...