36
இலங்கைசெய்திகள்

வடக்கில் கொட்டிக்கிடக்கும் அரச வேலைவாய்ப்புகள்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Share

வடக்கில் கொட்டிக்கிடக்கும் அரச வேலைவாய்ப்புகள்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை இன்றையதினம் (31) ஜனாதிபதி மேற்கொண்டிருந்த போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக காவல்துறை திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் தமிழ் மொழி மூல காவல்துறை உத்தியோகஸ்த்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், காவல்துறை வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி அநுர, தமிழ் இளைஞர் யுவதிகள் சேவையில் இணைய வந்தால், 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை காவல்துறை வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...