24 661134deef7a7
இலங்கைசெய்திகள்

ஒரே வீட்டில் மீட்க்கப்பட்ட இரு சடலங்கள்

Share

ஒரே வீட்டில் மீட்க்கப்பட்ட இரு சடலங்கள்

உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல – பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கலானது இன்று(06.04.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மூன்று பிள்ளைகளின் தாயான டபிள்யூ.எம்.பிரியங்கனி (வயது 42) மற்றும் பி.எம்.அனுர பண்டார (வயது 39) ஆகிய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள மூன்று பிள்ளைகளின் தாயான பிரியங்கனிக்கும், இவருடன் உயிரிழந்த திருமணமாகாத ஆண் அனுர பண்டார ஆகிய இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் இருவருக்கும் இடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து நேற்றுமுன்தினம் மாலை தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து மேற்படி பெண் தனது வீட்டை விட்டு தகாத உறவைப் பேணி வந்த நபருடன் சென்றுள்ள நிலையில் இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வலப்பனை நீதிவான் வருகை தந்து சடலங்களைப் பார்வையிட்டு மரண விசாரணை நடத்தியுள்ளதோடு, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? போன்ற கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...