download 10 1 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

Share

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர்  இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அக்கரப்பத்தனை,  சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68)  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து கடந்த 16 ஆம் திகதி, லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் உள்ள தனது மருமகனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல்போயுள்ளன. எனவே, நகைகளை பறிக்கும் நோக்கில் அவரை எவராவது கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மகள், மருமகன் மற்றும் இரு பேரக்குழந்தைகள் வசிக்கும் மேற்படி வீட்டில் சம்பவம் இடம்பெற்றவேளை, எவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும்,  தாயின் காது, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பாரிய வெட்டு காயங்கள் காணப்பட்டன என்றும் தெரியவந்துள்ளது.

ஹோல்றீம் தோட்ட பாடசாலையில் கல்வி கற்கும் மேற்படி வீட்டைச் சேர்ந்த சிறுமி,  இன்று (21) காலை தண்ணீர் பருக வீட்டுக்கு வந்திருந்த வேளையில் வீட்டில் இரத்த வெள்ளத்துடன் தனது பாட்டி  கிடந்ததை அவதானித்து  கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அயலவர்கள், லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நீதவானின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசேட குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...