இலங்கைசெய்திகள்

எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு

25 678e5471863e5
Share

எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு

அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்தை விட்டு எந்த நேரத்திலும் வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஜனாதிபதி அநுர குமார விடுத்த அறிவிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தனது தந்தை தற்போது வசித்து வரும் வீடு அவரது தனிப்பட்ட சொத்து அல்ல எனவும், அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றாலும் அரசியலமைப்பின் படி முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சலுகையாக அது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வீட்டை விட்டு வெளியேறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த அரசாங்கத்தின் தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில் அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...