பதவி விலகத் தயார்! – பிரதமர் அதிரடி

WhatsApp Image 2022 07 05 at 10.15.13 AM

“நாட்டை கட்டியெழுப்பக்கூடிய உரிய வேலைத்திட்டத்தை எந்த கட்சியாவது, முன்வைத்தால், பிரதமர் பதவியில் இருந்து விலக நான் தயார்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தமது ட்சிக்கு ஆட்சி வழங்கப்படும் பட்சத்தில், 6 மாத காலத்தில் நாட்டை வழமைக்கு கொண்டு வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
அவ்வாறான திட்டம் இருந்தால் அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்திலாவது முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்படும் திட்டம் , சாதகமாக இருக்கும் பட்சத்தில், பிரதமர் பதவியை துறப்பதற்கு நான் தயார்.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version