இலங்கைசெய்திகள்

இலங்கையில் தென்படவுள்ள அரிய வானியல் நிகழ்வு!

tamilni 56 scaled
Share

இலங்கையில் தென்படவுள்ள அரிய வானியல் நிகழ்வு!

அரிய வானியல் நிகழ்வான சனியின் சந்திர (Lunar Occultation) மறைவானது எதிர்வரும் 24ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு இலங்கையின் வான்பரப்பில் தென்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை, “ஆர்தர் சி கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மாடர்ன் டெக்னோலொஜிஸ்” (ACCIMT) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வானிலை மாற்றமானது ஜூலை 24ஆம் திகதி அன்று காலை 00:50 மணிக்கு தொடங்கி ஜூலை 25ஆம் திகதி காலை 00:40 மணி வரை நிகழவுள்ளதாக கூறப்படுகின்றது.

சந்திரன் சனிக்கு முன்னால் நகர்ந்து பூமியின் பார்வையில் இருந்து விலகும் நிகழ்வே சனியின் சந்திர மறைவு என்று அழைக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இதனை வெற்றுக் கண்ணால் சந்திரனைப் பார்ப்பதன் மூலம் காணலாம் என கூறப்படுகின்றது.

அதேவேளை, தொலைநோக்கி அல்லது ஒரு ஜோடி இரட்டைத் தொலை நோக்காடி (Binoculars) மூலம் தெளிவாகக் கண்டறிய முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வின் போது, சந்திரன் ஏறக்குறைய ஒரு மணிநேரம் இருபது நிமிடங்களுக்கு சனியை மறைக்கும் இந்த நிகழ்வை பூமியில் உள்ள சில பகுதிகளில் மட்டுமே காணமுடியும்.

இதற்கமைய, இலங்கையில் (Sri Lanka) இந்த நிகழ்விற்கான நேரம் மற்றும் கால அளவு ஆகியவை இடத்தினை பொறுத்து சற்று மாறுபடுமென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சனியின் அடுத்த சந்திர மறைவானது, இலங்கையின் வான்பரப்பில் 2037ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி அன்றே தென்படும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...