14 9
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Share

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல என்றும் நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு இன்னும் 10 கோடி ரூபாயை தாண்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

10 பில்லியன் வரம்பு, சில வேளைகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை வாக்குச் சீட்டுக்கு அதிகமாக இருந்தால், அதிகரிக்கப்படலாம்.

அந்த வகையில், ஒரு வேட்பாளருக்கு சுமார் 100 மில்லியன் ருபாய் கூடுதல் செலவாகும்.

இருப்பினும், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகமும் குறிப்பிட்டுள்ளது.

ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பின்னர் இன்னும் பணம் மீதம் உள்ளது.

அத்துடன் அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் எஞ்சியுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...