14 9
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Share

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல என்றும் நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு இன்னும் 10 கோடி ரூபாயை தாண்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

10 பில்லியன் வரம்பு, சில வேளைகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை வாக்குச் சீட்டுக்கு அதிகமாக இருந்தால், அதிகரிக்கப்படலாம்.

அந்த வகையில், ஒரு வேட்பாளருக்கு சுமார் 100 மில்லியன் ருபாய் கூடுதல் செலவாகும்.

இருப்பினும், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகமும் குறிப்பிட்டுள்ளது.

ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பின்னர் இன்னும் பணம் மீதம் உள்ளது.

அத்துடன் அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் எஞ்சியுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...